Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, March 15, 2012

உன் தோழி




கல்லும் முள்ளும் நிறைந்த உன் வாழ்க்கை பாதையில் 
மலர்பாதையாக என்றும் நான் உன்னுடன் 
உன் மேல் அன்புகொண்ட 
உற்ற தோழியாக நானிருக்க 
உன் நெஞ்சில் வலி எதற்கு 
கண்ணில் நீர் எதற்கு 

விழியிலே துணிவிருக்க - நீயும் 
விந்தை உலகில் உன் சாதனை  நிலை நாடிடு 
விடியலை நோக்கி பயணம் செய் 
உன் வெற்றிக்கு உன்னோடு  என்றும் 
உற்ற தோழியாய் நான் 

வாழும் வழிகள் பல இருக்கு 
வாழ்ந்து காட்டு உலகிற்கு 
நம்பிக்கை என்னும் தனம்பிகையோடு 
முயற்சி செய் 
நாளைய வெற்றி உன்கையில் 
நீ உன் வாழ்வில்  வெற்றி பெற  
என்றும் என் பிரார்த்தனைகள் உனக்காகவே 





Wednesday, January 18, 2012

தேடுகிறேன்





மழைக்காக நான் 

மரத்தடியில் ஒதுங்க 


மரத்தடி இருந்த நீயோ


மங்கை இவள் 


மனதோடு ஒதுங்கினாய் 



விழிவழியே என்னை

 
வழிப்பறி செய்தாய்

 
வலிகளை உணரமுன்

 
வரம் என்று நினைத்தேன் 



இதுவரை நான் 


தொல்லையாய் நினைத்தேன் 


என் தோள்களில் தொங்கிய 


துப்பட்டா 



தென்றல் உதவியோடு 


தெய்வாதினமாய் உன்னை 


தழுவியதால்



உறக்கம் கலைக்கும்


உன் நினைவுகளை


உதற மனமின்றி

 
உடுத்தி கொள்கிறேன் 


என் இரவு நேர போர்வையாய்



நீயோ

 
உன் விழி ஈர்ப்பின்


கவர்ச்சியால் என்னை

 
காந்தமாய் கவர்ந்ததை
 
கவனிக்காமல் சென்றாய்



நானோ 


சோ என பொழியும்

 
மழைத்துழியின் இடைவெளியில்

 
சோராமல் தேடுகிறேன் 


மனதை திருடி விட்டு

 
மாயமாய் மறைந்த உன்னை...





Friday, December 16, 2011

கண்ணீரில் மிதக்கும் இதயம்





ஏனையோர்  இதய துடிப்பை டேதெச்கொப்   மூலம் அறிந்து 

ஆதரவளிக்கும் உனக்கு 

என் இதயத்துடிப்பு கேட்காமல் இருகிறதே

நாளை இறப்பை எண்ணி இருபவர்களையும் அன்புடன் 

நூறு வருடங்கள் வாழ்வீர்கள் என 

நம்பிக்கை ஊட்டும்  உனக்கு 

நான் இன்று இறந்து கொண்டிருப்பது உனக்கு தெரிந்தும் 

தெரியாமல் இருக்கிறாயே...



நீ தேடிவந்த உறவு நான் 

நான் தேடாமல் பெற்ற அன்பு உனது 

அனைத்தும் தெரிந்தும் இன்று என்னை

 அலட்சியம் செய்கிறாயே ...



என்காதல் உயிருள்ளது என நினைத்தேன் 

பட்டு போன காதலை 

கண்ணீர் என்னும் உரமூற்றி வளர்த்தேன் 

அது மீண்டும் துளிர்க்கும் என எண்ணி

ஆனால் அது துளிர்க்காது என்பதை 

ஒரு நிமிடத்தில் தெரிந்து கொண்டேன் 

உன்பெயருடன் என் பெயரை 

நீ இணைக்க கூட விரும்பவில்லை என்பதிலிருந்து ...



ஏன் என்னை தேடிவந்து காதல் தந்தாய் 

ஏன் இன்று என்னை மறந்தாய் 

எதற்கும் பதில்தெரியாமல் 

மண்ணுக்குள்ளே  மண் ஆக காத்திருக்கிறேன் 

என் கல்லையிலாவது நம் பெயரை எழுதுவாய் என்ற 

நம்பிக்கையில் ..




Tuesday, December 6, 2011

என்னவன்






ஆறடி உயரத்தில் 

உன்னை கற்சிலையாக இல்லாமல் 

சந்தன நிறத்தில் உன்னை

 
கட்டுகுலையாமல் 


கருதரித்தவள் யாரோ? 





விரல்கள் கோதியதில் 

களைந்து விழுந்த முடிகளில் 


ஒன்று இரண்டு நெற்றி 


மீது சாமரம் விசுவது எப்படி? 







வில்லை வளைந்த புருவத்தின் 

கிழே விடாமல் துடித்துக்கொண்டு 


இருக்கும் கண் 
இமைகளின் உள்ளே 

உள்ள வெள்ளி திரையில் 


என் உயிரை ஈர்க்கும் 


கருமணியின் 
கவர்ச்சிதான் என்னவோ? 



புல்லாங்குழலுக்கு பதமான 



முங்கில் பிஞ்சுகள் போலே 


உன் பத்து கைவிரல்களின் 

பவித்திரம் தான் என்னவோ? 



உன்  ஓர விழி பார்வையுடன் 


உதட்டின் வழியான பாதி சிரிப்பும் 


அவன் ஆண்மைக்குள் இருக்கும் மென்மையை 


அருமையாக அறிவிக்கும் 


என் உள்ளம் கவர் கள்வனே 
உன்னை எப்போது காண்பேன் !







Friday, November 11, 2011

ஒரு நொடியாவது உன் மழலையோடு பேசி பார்த்திருப்பாயா ?





பருவ வயது பசியால் 


பத்து மாதம் சுமந்ததை
 
பாசமும் இல்லாமலும் 


பஞ்சணையில் தவழ விடாமல்

 
பற்றைக்குள் எறியும் போது 


கதறவில்லையா உன் கருவறை? 





தன் பிஞ்சுக்கரன்களால்


மாதாவின் வதனத்தை

வருடி அணைத்து தன்


மல்லிகை இதழ்களால்


முத்தமிடும் மழலையை


பார்க்கும் போது


கருகவில்லையா உன் கன்னங்கள்? 





அன்னையின் மார்பு சூட்டில்

தயத்துடிப்பின் தாலாட்டோடு 

உறங்கும் மழலை 


உன் கண்முன்னே எதிர்படும் போது 


ஒரு நிமிடமாவது உன் 


சுவாசப்பை சுருங்கி


விரிய மறுக்கவில்லையா??





மழலையோடு கூடிய மடியுடன்


தாய் ஒருத்தியை காணும்போது


நீ-வெறுமையான உன் மடியை 

வெறித்து பார்க்கவில்லையா ?



எதுவும் புரியதபோதும் 


எல்லாம் புரிந்ததுபோல் 


புரியாத மொழி ஒன்றில்


புதிராய் பேசி மகிழும்


தாய் சேய் மொழிகளை 


கேட்டபோது உன் 


செவிப்பறைகள் செயலிலக்கவில்லையா?





நடை பயிலும் மழலையோடு 


மீண்டும் நடை பயிலும்


அன்னையரை காணும் போது 


நகரமறுத்து உன் கால்கள்


ஊனமாவதை உணரவில்லையா ?


Thursday, November 3, 2011

நட்பு





மழலை வயதில்


மாசில்லா மனம்

மானசீகமாக ஏற்கும்


முதல் உறவு நட்பு 



அறியா வயதில்


மனதறியாமல் வரும்


மனஸ் தாபங்களுக்காக


மனம் வருந்துவதும் 


மழலை நட்பே 





வழி காட்டி எவரும்


இல்லாமல் சுயமாக 


நாம் தேடிய உறவு


நமை வழி நடத்தும்



வழித்துனைக்காக நெருங்காமல் 


வழிகாட்டியாய் நெருங்கினால்

வழிமறி போகாமல் 


வாழ்க்கையை ருசிக்க 


வழிகாட்டும் உன்னை 


களங்கம் இல்லாத


கலங்கரை விளக்கைப்போல்


Monday, October 24, 2011

கல்லறை





உலகை பார்க்க விரும்பி 


விரல் விட்டு எண்ணி கொண்டு

உன் இதய துடிப்பில் சுற்றி திரிந்தேன்


அன்னையே உன் கருவறையில் 


பஞ்சத்தில் பரிதவித்து



பாடையில் பயணிப்போரும் 

கொள்ளை நோயின் 


கொடுமையால் கொலையுண்டோரும்



மனிதனை மனிதன்

மதியிழந்துபோய்


மரணப்பாயில் சுற்றுவதும்


இறைவனும் சீற்றம் கொண்டு


இயற்கையை ஏவிவிடுவதும் என


எங்கும் மரண ஓலங்களே


இதை பார்க்கவா பத்துமாதங்கள்


உன்னை சுமைதாங்கி ஆக்கினேன் 


ரணங்களோடு வாழ்வதை 


விட மரணங்கள் மகிழ்வானது 


காப்பாற்ற எவரும் இல்லாத 


அநாதரவான இவ்வுலகில் 


ஆடம்பரமான வீடு எதற்கு


அமைதியாகவும் ஆழமாகவும் உறங்க


ஆறடி நிலத்தில் அடக்கமான கல்லறை போதும்


Thursday, October 20, 2011

முதுமையின் அழகு



நிமிர்ந்த நடையும் 

நேர் கொண்ட பார்வையும்


முறுக்கிய மீசையும்


அகன்ற தோள்களும்


இளமையின் ஆழகு





பொக்கை வாய் சிரிப்பும்


வெண் பஞ்சு தலைமுடியும்


வானவில்லாய் வளைந்து 


கூன் விழுந்த முதுகும்


ஊன்று கோலோடு சேர்த்து


மூன்று காலில் நடப்பதும்

முதுமையின் அழகு

காதல் தோல்வி



பாலர் வயதினிலே

பல இலட்சியங்களுடன்


பாதையோரம் நடைபயின்று


பள்ளி சென்றவன்



பருவ வயதிலே


பாவையவள் கண்பட்டு


பாதைமாறி சென்று


பாதிவழியில் பறந்துபோன


பாவையை நினைத்து


படுகுழியில் விழுகிறான்





நாடியோரம் தாடி வளர்த்து


கைகளிலே மதுப்போத்தல்


விரல்களின் இடையே


மூன்றாம்விரலாய்சிகரெட்


சுயத்தை இழந்து


தெருவோரம் உலாவருகிறான்


ஏன் என்று கேட்டால்


காதல் தோல்வியின்


சின்னங்கள் இவைதானாம்