Sunday, December 18, 2011

ரீமிக்ஸ்



கண்ணா கண்ணா  காதல் கண்ணையா
நீ என்னை விட்டு போனதென்னையா 
நெஞ்சுக்குள்ள காயம்  ஆச்சு  யா  
என்பட்டம் பூச்சி சாயம் போச்சு யா 
அட  பெண்ணோட  காதல் கைரேகை போல
ஆணோட காதல் கைக்குட்டை    போல
கனவுக்குள அவனை வச்சனே 
என்கண்ணை ரெண்டை திருடி போனானே
புல்லாங்குழலை கையில் தந்தானே 
என்மூச்சு காத்தை    வாங்கி போனானே 

ஆம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப 
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் ஆணால்
 
அவன் கைய விட்டுதான் போயாச்சு 
கண்ணு ரெண்டுமே பொய் ஆச்சு 
காதல் என்பது வீண் பேச்சு 
மனம் உன்னாலே  புண்ணா போச்சு    
காதல் பாதை கல்லு முள்ளுடி 
அத  கடந்து போன ஆளே இல்லடி 
காதல் ஒரு போத மாத்திரை 
அத போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை 
ஓட்ட போட்ட   மூங்கில் அது பாட்டு  பாட கூடும் 
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் 
மனம் உன்னை பத்தி பாடும் 
வந்துபோனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவன்  பூவு இல்ல நாரு

என்னை திடம் போட்டு நீ திருடாதே 
எட்ட நின்னு நீ வருடாதே 
மனம் தாங்காதே தாங்காதே 
வானவில்லின் கோலம் நீயடா 
என் வானம் தாண்டிபோனது எங்கே யா 
காதல் இல்ல ஊரு எங்கடி 
என்னை கண்ணை கட்டி கூட்டி  போங்கடி 


Saturday, December 17, 2011

நட்பென்னும் உறவு





பிறப்பால் வந்த உறவுகள் 


உதறிவிட்டு செல்லும்


எம் உணர்வுகளை 

நட்பு மட்டும் தான்

 
உணர்வுகளால் வந்த 


உறவு என்பதால்

 
உருகிக் கொண்டே இருக்கும் 


உயிர் உள்ளவரை 


பார்த்து பேசி

 
பழகுபவர்களே பாதி வழியில் 


பரிதவிக்க விட்டு

 
செல்லும் போது


பாராமுகமாய் இருந்து 


பாசமாய் பழகும் 


பல நட்புக்கள்

 
பவித்திரமாய் என்றும் 


நம் நெஞ்சோடு இருக்
கும்



பகுத்தறிவோடு தான்

பழகுறோமே தவிர 



பாகு பாட்டோடு அல்ல 

அன்பை மட்டும் மூலத
னமாக இட்டு 


நண்பர்களை  பெறுகின்றோம்..




Friday, December 16, 2011

கண்ணீரில் மிதக்கும் இதயம்





ஏனையோர்  இதய துடிப்பை டேதெச்கொப்   மூலம் அறிந்து 

ஆதரவளிக்கும் உனக்கு 

என் இதயத்துடிப்பு கேட்காமல் இருகிறதே

நாளை இறப்பை எண்ணி இருபவர்களையும் அன்புடன் 

நூறு வருடங்கள் வாழ்வீர்கள் என 

நம்பிக்கை ஊட்டும்  உனக்கு 

நான் இன்று இறந்து கொண்டிருப்பது உனக்கு தெரிந்தும் 

தெரியாமல் இருக்கிறாயே...



நீ தேடிவந்த உறவு நான் 

நான் தேடாமல் பெற்ற அன்பு உனது 

அனைத்தும் தெரிந்தும் இன்று என்னை

 அலட்சியம் செய்கிறாயே ...



என்காதல் உயிருள்ளது என நினைத்தேன் 

பட்டு போன காதலை 

கண்ணீர் என்னும் உரமூற்றி வளர்த்தேன் 

அது மீண்டும் துளிர்க்கும் என எண்ணி

ஆனால் அது துளிர்க்காது என்பதை 

ஒரு நிமிடத்தில் தெரிந்து கொண்டேன் 

உன்பெயருடன் என் பெயரை 

நீ இணைக்க கூட விரும்பவில்லை என்பதிலிருந்து ...



ஏன் என்னை தேடிவந்து காதல் தந்தாய் 

ஏன் இன்று என்னை மறந்தாய் 

எதற்கும் பதில்தெரியாமல் 

மண்ணுக்குள்ளே  மண் ஆக காத்திருக்கிறேன் 

என் கல்லையிலாவது நம் பெயரை எழுதுவாய் என்ற 

நம்பிக்கையில் ..




Tuesday, December 6, 2011

என்னவன்






ஆறடி உயரத்தில் 

உன்னை கற்சிலையாக இல்லாமல் 

சந்தன நிறத்தில் உன்னை

 
கட்டுகுலையாமல் 


கருதரித்தவள் யாரோ? 





விரல்கள் கோதியதில் 

களைந்து விழுந்த முடிகளில் 


ஒன்று இரண்டு நெற்றி 


மீது சாமரம் விசுவது எப்படி? 







வில்லை வளைந்த புருவத்தின் 

கிழே விடாமல் துடித்துக்கொண்டு 


இருக்கும் கண் 
இமைகளின் உள்ளே 

உள்ள வெள்ளி திரையில் 


என் உயிரை ஈர்க்கும் 


கருமணியின் 
கவர்ச்சிதான் என்னவோ? 



புல்லாங்குழலுக்கு பதமான 



முங்கில் பிஞ்சுகள் போலே 


உன் பத்து கைவிரல்களின் 

பவித்திரம் தான் என்னவோ? 



உன்  ஓர விழி பார்வையுடன் 


உதட்டின் வழியான பாதி சிரிப்பும் 


அவன் ஆண்மைக்குள் இருக்கும் மென்மையை 


அருமையாக அறிவிக்கும் 


என் உள்ளம் கவர் கள்வனே 
உன்னை எப்போது காண்பேன் !







Friday, December 2, 2011

முதுகு வலியா??









முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது 
வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்டவலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம். 




நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல்செய்கிறோம்உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது  நடக்கும் போது கூன்போடுவதது பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.


உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும் ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை . உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை  அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம்.




வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் ஒரு திறமிக்க அணுகுமுறையாக இருக்கலாம், ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட உடல்நல நிபுணரின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.






  • எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக)   நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

  • தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.



  • உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

  •  நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு 

          மாற்றிக்கொள்ளவும்.
  •  கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழுமுதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

  •  அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
  • அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

  • முதுகு வலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும். 30 நிமிடங்களுக்கு       ஒரு முறை எழுந்து சில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

       














கீழ்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் 
உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1) தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருப்பின்,

2) வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்,

3) குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்,

4) நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

முதுகு வலி  துவக்க நிலையில், எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில  நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள்  பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.   நீங்கள் அமரும் அல்லது நிற்கும் நிலை, காலணி, அமரும் நாற்காலிஅல்லது சோபா ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும்.உன்னிப்பாக கவனித்து செயல்பட்டால், பெரும்பாலான முதுகு வலியை தவிர்த்து விடலாம்.

 போதுமான அளவு ஓய்வில்  இருத்தல், வலி நிவாரணி எடுத்து கொள்ளுதல், வலி குறைக்கும் 
பட்டைகள் கட்டிக் கொள்ளுதல், மென்மையான  படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், தசை சீர்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்ளுதல் ஆகியவை மேற்கொண்டால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். 
உடல் எடையை குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். உடல் எடையுடன், “பி.எம்.ஐ.,’ அளவு சரியாக ஒத்து போகிறதா என்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

நெடுநேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி, பணி செய்தால் அதிக வலி ஏற்படாது. குத்துக் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும்.

 உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.

 கைப் பையை ஒரே தோளில்  தொடர்ந்து மாட்டிக்கொள்ளாமல், அடிக்கடி மாற்றி மாட்டிக் கொள்ள வேண்டும்.

  இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாகதோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால், முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்கஇவை உதவும். 

உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த  பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்னை ஏற்படாது. 

உடலும், முதுகுத் தண்டு வடமும் ஏற்கனவே இருந்த வடிவமைப்புக்கு திரும்பும்.
யோகா, ஏரோபிக்ஸ், போர் பயிற்சிகள் தண்டு வடத்திற்கு சிறந்த பயிற்சி அளிக்கின்றன. புத்தகங்கள், ஆசிரியர்கள், “டிவி’ மற்றும் வெப்சைட்டுகள் மூலம் இந்த பயிற்சிகள் குறித்து விளக்கம் பெறலாம்.
பத்து வயது முதல் தினமும் சில நிமிடங்களாவது முதுகுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால் திடமான, நிமிர்ந்த தோற்றத்தை பெறலாம்.