Tuesday, October 25, 2011

ஆயிரம் காலத்து பயிர் கருகலாமா???



விவாகரத்து கூறி நிற்கும் மணமக்களே சற்று சிந்தியுங்கள்...
இரு மனங்களின் சங்கமம் ,ஆயிரம் காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றெல்லாம் சொல்லப்படும் திருமணங்கள் முறியலாமா???? 




விவாகரத்து ஏற்படுவதற்கான காரணங்கள் 

தேவைகேற்ப வேலை வாய்புகள்,கைநிறைய சம்பளம் கட்டுபாடற்ற சுதந்திரம் கண்டதும் காதல் ,அடுத்து கல்யாணமென இளம் தலைமுறையினர் எந்தளவு வேகமாக திருமண பந்தத்தில் நுழைகின்றனரோ அதனைவிட வேகமாக அதனை உடைத்துக்கொண்டு வெளிவந்து விவாகரத்து கூறிநிற்பதை இப்போது அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.


இவ் விவாகரத்துக்கு பொருளாதாரம் ,துணைவர்களின் சமூக அந்தஸ்து , திருமணதிட்கு புறம்பான உறவு,  கூட்டுக்குடும்ப  வாழ்க்கை , பாலியல் பலவீனங்கள் , திருமணம் மூலம் ஏற்படுகின்ற கட்டுபாடுகள்  போன்றவையே காரணமாகின்றன.
கூட்டுக்குடும்ப  அமைப்பு , கணவன் , மனைவி என்ற  கண்ணியமான உறவு , கட்டுபாடான வாழ்க்கை , கலாச்சாரம் , பண்பாடு என்றிருந்த எம்மவரின் வாழ்கை எந்திரமயமான உலகின் சூழலில் சிக்கி நிலையற்ற குடும்ப அமைப்பாகவும் கட்டுபாடற்ற வாழ்க்கை முறையை கொண்டதாகவும் மாறியதினாலேயே    ஆயிரம் காலத்து பயிரான திருமணங்கள் அற்ப ஆயுளிலேயே கருகிபோகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் ஒருவரை ஒருவர் நன்றாகபுரிந்து கொள்வதற்கான நேரமும் மிக குறைவாக இருப்பதுடன் அந்தஸ்துகள் காரணமாக விட்டுகொட்டுக்கும் மனப்பான்மையும் குறைந்து விட்டது . இவர்களில் பலர் பிடிவாதம் நிறைந்தவர்களாகவே காணப்டுகின்றனர்.

திருமணம் செய்யும் ஒவோருவரும் எதிர்பர்புகளுடனும் எராளமான கனவுகளுடனும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்ன சின்ன பிரச்சினைகளால் சிதைவடையும் போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இது விவாகரத்து வரைகொண்டு செல்கின்றது.

இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் -மனைவி தங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போகின்றது . உணர்வுகளை மட்டுமில்லாமல் அவர்களிடம் ஏற்படும் சிறு பிரச்சினைகளை கூட தீர்த்து கொள்ள முடியாமல் போகின்றது.  இதனால் சிறு பிரச்சினை கூட பூதாகரமாக மாறி விவாகரத்து வரை செல்கின்றது. 

மேலும் இருவரும் வேலைக்கு செல்லும் கணவன் மனைவியாக இருந்தால் இருவரும் பொருளாதரத்தில் சமபலத்தில் இருப்பர். இதனால் உன்னை நம்பி நான் இல்லை என்ற சுய கௌரவம் வந்து விடுவதால் தமக்கிடையில் பிரச்சினைகள், மனவேறுபாடுகள் ஏற்படும் போது தமது பிரச்சினைகளை பெரியவர்களிடம் கூட கூறாது பிரிந்துவிடுவோம் என முடிவெடுத்து விவகாரத்தினை நாடுகின்றனர் .இதனால் சமரசம் மூலம் தீர்க்க கூடிய பிரச்சினை கூட தீர்க்கமுடியாமல் போய் விடுகின்றது.

தாம் விவாகரத்து செய்து விட்டால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென்று யோசிப்பதற்கு கூட இவர்கள் தயாரில்லை. நீதிமன்றத்தில் தான் பிள்ளையின் எதிர்காலம் தீர்மானிக்கபடுகின்றது. தாயுடன் பிள்ளை இருப்பதா தந்தையுடன் பிள்ளை இருப்பதா என்பதை நீதிபதியே தீர்மானிகின்றார். இதனால் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காம போவதுடன் அவர்கள் உள ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். அனால் விவாகரத்து முடிவெடுபோருக்கு இதெல்லாம் மூன்றாம் பட்சமாகவே உள்ளது. 

 கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகள் வெகுதூரம் செல்லுமானால் அது அவர்களின் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் ,ஆரோக்கியம், மனநிலை என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் . அதுமட்டுமின்றி ஆரோக்கியம் பிள்ளைகளின் உரிமைகள் பாதிக்கபடுவதுடன் அப்பிள்ளைகள் எதிர்காலத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சீரழிவுக்குள்ளாக வேண்டியேற்படும். எனவே சுமுகமான முறையில் சட்டத்தை  நாடாது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முயற்சிப்பதே சிறந்தது. 

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 



குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் உள்ள "நான்" என்ற கர்வத்தை குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்து விடலாம். இதுபோல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் தன்மை குழந்தைகளின் எதிர்காலம், திருமண பந்ததிற்கான மரியாதையை கொடுத்தல் போன்றவற்றை இருவரும் கடைபிடித்தால் விவாகரத்து பிரச்சினையை குறைக்கலாம். அத்துடன் கலாசாரத்தையும்      பாதுகாக்க முடியும்.

விவாகரத்துகளை தவிர்க்க விட்டுகொடுக்கும் மனப்பான்மையே ஒரே வழியாக உள்ளது. கணவன்,மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றயவரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளை மனம் விட்டு பேசிதீர்த்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தின் அந்தரங்க விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.

கணவன் மனைவியின் குடும்பத்தை பற்றியோ மனைவி கணவனின் குடும்பத்தை பற்றியோ விமர்சிக்க கூடாது. தரக்குறைவாக பேசக்கூடாது. கணவன், மனைவி உறவு என்பது உடலுறவுடன் மடுப்பட்டதல்ல அதற்கும் மேலாக பல விடயங்கள் உள்ளன. கணவன் மனைவிக்கிடையில் கோபங்கள் வரலாம். ஆனால் ,அவை வெறுப்பாக மாறிவிட கூடாது. இவ்வாறன நடைமுறைகளை பின்பற்றினால் விவாகரத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

எனவே விவாகரத்து கூறி நிற்கும் தம்பதியர்களே சற்று கவனத்தில் இதை எடுத்து கொண்டு ஆயிரம் காலத்து பயிரான மணவாழ்க்கை அழியலாமா???? சிந்தியுங்கள். விவாகரத்தை நாடாது சுமூகமாக உங்கள் பிரச்சினைகளை இருவரும் மனம் விட்டு பேசி கருத்து ஒருமித்து விட்டு கொடுத்து வாழுங்கள்.  இதனால்  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உங்கள் திருமண வாழ்க்கை அழகாக பூத்து குலுங்கி மணம் வீசும்.   
        

தீபாவளி






தீபாவளி இந்து மக்களின் பண்டிகைகளில் சிறப்பான ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றதுதீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை


. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும்


 பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் 


பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் 


செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர்


 மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்,


 பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது 


ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 


எரித்துவிட வேண்டும்.



தீபாவளி ஐப்பசி அமாவாசை அன்று கொண்டா டப்படும். இந்துக்கள் மட்டுமன்றி இப்பண்டிகையை சீக்கியர்களும் சமணர்களும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தன்று இந்துக்கள் வீட்டில் எண்ணெய் தேய்த்து குளித்தல், புத்தாடை அணிதல், கோயிலுக்குச் செல்லுதல், இனிப்புப்பண்டங்கள் செய்து அயலவர்களுக்கு கொடுத்தல், வெடி வெடித்து, மத்தாப்பு சுற்றுதல், இறந்தவர்களுக்கு உணவு படைத்தல் என பல விடயங்கள் நிகழ்த்தப்படு கின்றன. இவ்வாறு பல மகிழ்ச்சிகரமான விடயங்களை உள்ளடக்கிய தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? பல காரணங்கள் விடைகளாகக் கூறப்படுகின்றன.
இராமாயண இதிகாசத்தில் இராமர் இராவணைனை அழித்துத் தனது வனவாசத்தையும் முடித்து மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி நகரை நோக்கி திரும்பிய அந்த இனிய நாளை, மக்கள் மகிழ்ச்சி களிப்போடும் ஆர்ப்பாட்டங்களோடும் கொண்டாடிய தருணத்தை நினைவுபடுத்தும் முகமாக கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. அந்த இனிய நாளில் மக்கள் விளக்குகள் ஏற்றி வீதியை ஒளிமய மாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இதேபோல் இன்னொரு புராண கதையில் கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான்.
அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.


இதற்கு ஸ்கந்த புராணத்திலும் ஒரு நிகழ்வு கூறப்படுகின்றது. சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றி ணைகிறார்.
இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தி னத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக ஒரு சாரர் கூற மற்றும் ஒரு சாரார் தீபாவளிக்கு ஸ்கந்த புராணத்திலேயே இன்னும் ஒரு காரணத்தையும் கூறுகின்றனர்.
முருகன் சூரனின் அட்டூழியங்களை இவ்வாறு ஒழிக்க சூரனையே அழிக்கின்றார். சூரன் அழியும் அவ்விடத்தில் சேவலும் மயிலும் தோற்றுகின்றன.
அச்சந்தர்ப்பத்தில் சூரனின் இரத்தம் பூமி எங்கும் பரவுகின்றது. இதனால் உயிரினங்களுக்கு தோஷம் ஏற்படும் அதேவேளை, முருகனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகின்றது. இவ்வாறு முருகனுக்கு ஏற்படும் தோஷம் மக்கள் எல்லோரையும் சார்ந்ததாக கருதியே எண்ணெய் தேய்த்து குளிக்கும் மரபு தோன்றியதாக ஓர் ஐதீகம்.
இதே சந்தர்ப்பத்தை மையப்படுத்தி சூரன் இறந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தேவலோகம் இருளடைந்ததாகவும் அவ் இருளை போக்கவே வாண வேடிக்கைகளும் விளக்குகளும் ஏற்றப்பட்டதாக ஒரு கதை உண்டு.
இந்துக்கள் இவ்வாறான பல காரணங்களைக் கூறும் அதேவேளை சீக்கியர்கள் 1577 தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையொட்டி கொண்டாடிய மகிழ்ச்சிகரமான கொண்டாட்டம் இத் தீபாவளி என்கின்றனர். சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி என்கின்றனர்.
எது எவ்வாறு எனினும் பலர் பல புராண கதைகளை சொன்னாலும் இறுதியில் எமக்கு விளங்கும் ஒரே கருத்து தீயவன் ஒருவனின் அழிவைக் கொண்டாடும் நாளே தீபாவளி. மனிதப் படைப்பில் எல்லோரும் எல்லா நல்ல பண்புகளை கொண்டிருக்காவிடினும் தீய எண்ணங்களையும், கொள்கைகளையும் சுட்டெரித்து நல்ல விடயங்களால் மனதிற்கு ஒளி ஏற்றி கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?










ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் . அனால் நம் குழந்தை படித்ததை எல்லாம் மறக்கும் பொது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.

ஞாபகம் குறித்து சில தகவல்கள் 

நாம் பார்க்கும் ,கேட்கும், உணரும் ,சுவைக்கும் முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இறுக்கும்(சென்சரி மெமரி ) உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தையும் செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது சோர்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணிதுளிக்களுக்கு மட்டும் இருக்கும்.
சோர்ட் டெர்ம் மெமரியை திரும்ப செயும் பொது அது நாள் பட்டஞாபகசக்தியாக மாறும். 
எனவே , ஞாபக சக்திக்கு மிகவும் முக்கியமான இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல். 
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்புள்ளது . இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுவதும் நினைவில் இருக்கும் .

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் explict மற்றும் implict .

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.

implicit  என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல். 

இனி நினைவு திறனை அதிகரிக்கும் விழிகள்
  1. எதையும் தாய் மொழியில் சிந்திக்க வேண்டும். நீங்கள் படிப்பது தமிழோ ஆங்கிலமோ பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னமோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும். 
  2. புரியாமல் எதையும் படிக்க கூடாது ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை . முழு கவனம் அவசியம். 
  3. Mnemonics வைத்து படிப்பது ஒரு கலை அதை குழந்தைக்கு கற்று கொடுங்கள் 
  4. Eg:news- north,east,west,south
  5. படித்தவுடன் எழுதிபார்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் 'Home work 'என்ற பெயரில் கடமைக்கு செய்தல் பயனில்லை .
  6. படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்ல வேண்டும் 
  7. நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேரதூகம் நிச்சயம் அவசியம். 
  8. இரவில் விரைவில் தூங்கி அதிகாலை படிக்கும்படி சொல்ல வேண்டும் 
  9. தூங்க போகுமுன் அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி சேயும் பொது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூளைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை சோர்ட் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும் இது மிக முக்கியமான பயிற்சி ஆகும். 
  10. மாவு சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்து கொள்வது நல்லது 

Monday, October 24, 2011

கல்லறை





உலகை பார்க்க விரும்பி 


விரல் விட்டு எண்ணி கொண்டு

உன் இதய துடிப்பில் சுற்றி திரிந்தேன்


அன்னையே உன் கருவறையில் 


பஞ்சத்தில் பரிதவித்து



பாடையில் பயணிப்போரும் 

கொள்ளை நோயின் 


கொடுமையால் கொலையுண்டோரும்



மனிதனை மனிதன்

மதியிழந்துபோய்


மரணப்பாயில் சுற்றுவதும்


இறைவனும் சீற்றம் கொண்டு


இயற்கையை ஏவிவிடுவதும் என


எங்கும் மரண ஓலங்களே


இதை பார்க்கவா பத்துமாதங்கள்


உன்னை சுமைதாங்கி ஆக்கினேன் 


ரணங்களோடு வாழ்வதை 


விட மரணங்கள் மகிழ்வானது 


காப்பாற்ற எவரும் இல்லாத 


அநாதரவான இவ்வுலகில் 


ஆடம்பரமான வீடு எதற்கு


அமைதியாகவும் ஆழமாகவும் உறங்க


ஆறடி நிலத்தில் அடக்கமான கல்லறை போதும்


Thursday, October 20, 2011

மக்களை நிலைகுலையவைக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு





அரசாங்கத் தலைவர்கள் பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றியும் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கும் தங்களது கனவு பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களோ கூரையைப் பிரித்துக் கொண்டு வானளாவ உயர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவினால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதாக அரசாங்கம் பெருமை பேசுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மக்களோ அதே அமைதியின் விளைபயன்களைப் பொருளாதார ரீதியில் அனுபவிக்க முடியாத நிலையில் அமைதியின் அர்த்தமற்ற தன்மை குறித்து விரக்தியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

வெறுமனே தேங்காய்ச் சம்பலுடன் மூன்று வேளையும் சோற்றையோ பாணையோ சாப்பிடுவதென்பதே பல குடும்பங்களைப் பொறுத்தவரை கட்டுப்படியாகாத காரியமாக மாறியிருக்கும் நிலையில் வாழ்க்கைச் செலவின் இடையறாத அதிகரிப்பை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துவதற்கு உருப்படியான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வக்கற்றதாக இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேறு பிரச்சினைகளை பூதாகாரமாக ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் ஏதோஒரு அத்தியாவசியப் பாவனைப் பொருளின் விலை அதிகரிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கிடையில் சமையல் எரிவாயுவின் விலை, எரிபொருட்களின் விலை, பால்மா வகைகளின் விலை, கோதுமை மா மற்றும் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இயல்பாகவே வேறுபல அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. கோதுமை மாவையும் பாணையும் பொறுத்தவரை அவை எமது நாட்டு மக்களின் முக்கியமான உணவுப் பொருட்கள் அல்ல என்ற வாதத்தையே பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை முன்வைக்கிறது. கோதுமை மாவினதோ பாணினதோ விலைகள் அதிகரிப்பின் விளைவாக மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டநிலைக்கான பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்ளும் சூழ்ச்சித்தனமான நோக்குடனேயே இந்தவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், கோதுமை மாவும் பாணும் எமது நாட்டு மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களின் அன்றாட முக்கிய உணவுப் பொருட்கள் என்பதே உண்மையான நிலையாகும். அடுத்து வரும் நாட்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படக்கூடிய அறிகுறிகள் தாராளமாகவே தெரிகின்றன.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி தருமாறு போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ கட்டணங்களை அதிகரித்தே தீரப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அச்சுறுத்தல் வேறுவிடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் மக்கள் மீது மேலும் மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றப்படுவதைத் தடுப்பதற்கான திராணியற்றதாக அரசாங்கம் இருக்கிறது. கட்டுப்படியாகக் கூடிய விலைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அரசாங்கம் தேசாபிமானத்தை அளவுக்கு அதிகமாக மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இறுதியாகக் கிடைத்த வாய்ப்புத்தான் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை. அந்த அறிக்கைக்கு எதிராக உச்சத் தொனியில் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டு, ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு பதில் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மறுபுறத்தில் அந்தறங்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாமென்று அரசாங்கம் நினைக்கிறது. ஆனால், நிச்சயமாக நிலைமை மாறியே தீரும்!

விநோதமான ஆய்வு





தமது சொந்த அலுவல்கள் காரணமாக அலுவலகங்களுக்கு வராமல் இருந்துவிட்டு மறுநாள் வரும் போது உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு வரவில்லையென பொய் கூறுபவர்கள் தொடர்பான விநோதமான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அலுவலகங்கள், தொழிற்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட "குரோனஸ்' என்ற அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அமைப்பொன்றே இந்த ஆய்வை சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், மெக்ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மேற்கொண்டு தனது முடிவினை பட்டியலிட்டு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் ஆய்வின்படி தமது சொந்த அலுவல்களுக்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு வராமல் இருந்துவிட்டு உடல் நிலை சரியில்லை அதனால் வேலைக்கு வரவில்லையெனக் கூறுவதில் சீனர்களே முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் பெறும் விடுமுறைகளில் 71 சதவீதமானவை பொய்களைக் கொண்டவையாகவே உள்ளன. இதேபோன்று இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியர்களின் விடுமுறைகளில் 62 சதவீதம் பொய்யானவையாகவும் மூன்றாவது இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலியர்களின் விடுமுறைகளில் 58 சதவீதம் பொய்யான காரணங்களைக் கொண்டதாகவும் அமெரிக்கா 52 சதவீதம், பிரிட்டன் 43 சதவீதம், மெக்ஸிக்கோ 38 சதவீதம், பிரான்ஸ் 16 சதவீதமென அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இவ்வாறு பொய்க்காரணங்களைக் கூறி விடுமுறை எடுப்பதற்கு சொந்த அலுவல்கள், பணிப்பளு பணிப்பளு தொடர்பான மன அழுத்தங்களைக் காரணமாகக் கூறியுள்ள "குரோனஸ்' அமைப்பு இதனைத் தவிர்க்க தொழிலாளர்களுக்கு வேலை செய்ய இலகுவானபடி பிரித்துக் கொடுக்கலாம். ஊதியம் அல்லாத விடுமுறை எடுக்க அனுமதிக்கலாம். வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலை இருந்தால் கொடுக்கலாமெனவும் பரிந்துரைத்துள்ளது. எமது நாட்டில் இவர்களையெல்லாம் தோற்கடிக்கக்கூடிய வீர,தீரர்கள் உள்ள நிலையில் இந்த ஆய்வில் இலங்கையை உள்ளடக்கவில்லை என்பதே எமக்குள்ள பெரிய கவலை. இல்லாதுவிட்டால் எமது நாடும் இந்தப் பட்டியலில் முன்னுரிமை பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனங்களை விடவும் அரச நிறுவனங்களிலேயே இந்தப் பொய் மன்னர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் அலுவலகங்களுக்கு "கட்' அடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் அரச நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படுகின்றனவோ இல்லையோ பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த காலத்திற்குள் தமது பணிகளை முடிக்க முடியாத காரணத்தினாலேயே இலஞ்சம் கொடுத்தாவது தமது பணிகளை முடித்துவிட வேண்டுமென்ற தவறான பாதைக்குச் செல்கின்றனர். இலங்கையில் ஊழல் பெருகுவதற்கு அரச நிறுவனங்களில் இடம்பெறும் அளவுக்கதிக விடுமுறைகளும் ஒரு காரணமென்பதனை மறுத்துவிட முடியாது.
எமது நாட்டில் அரச நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடுகளை விடவும் தனியார் நிறுவனங்களில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதனாலேயே அவை திறம்படச் செயற்படுகின்றன. ஆனாலும் இங்கு கூட "தண்ணி' காட்டக்கூடிய ஊழியர்கள் இருக்கின்றனர் தான். தனியார் நிறுவனங்களைப் போன்ற கட்டுப்பாடுகளை அரச நிறுவனங்களிலும் அமுல்படுத்தினால் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடிவதுடன் இலஞ்சத்தை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும். உலக அமைப்புகள் மேற்கொள்ளும் இவ்வாறான ஆய்வுகளில் இலங்கையை உள்ளடக்காதது நாம் செய்த புண்ணியமா அல்லது பாவமா என்பதுதான் தெரியவில்லை.

வேண்டாம் கல்வி வியாபாரம்




பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடக்கம் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்வது வரை நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகப் பரந்தளவில் பெற்றோர்கள், மாணவர்கள் கல்விச் சமூகம் மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

தமது பிள்ளைகளுக்கு எப்பாடுபட்டாவது சிறந்த கல்வியை வழங்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் முயற்சியையும் கொண்டுள்ள பெற்றோர்கள் பலர், திறந்த பொருளாதாரத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் போட்டித் தன்மை கல்வித் துறைக்குள்ளும் ஆழமாக ஊடுருவியிருப்பதால் திக்கு முக்காடுவதை காணமுடிகிறது.
உள்ளூர் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களை விட தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையை அதிகளவுக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டம் யாவரும் அறிந்ததொன்றாகும். அக் கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தை அங்கீகரிக்கப் போவதில்லையென்று இலங்கை மருத்துவப் பேரவை அறிவித்திருந்தமை எதிர்ப்புக் குரலுக்கான சிறிய உதாரணமாகும். உயர் கல்வித் துறையானது கேள்விக்குரிய தகைமையைக் கொண்டிருக்கின்றது என்பதே இங்குள்ள முக்கியமான விடயமாகும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்களை கேட்டால் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்குமா என்பது தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கல்வி முறைமையில் ஏதோவொரு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பதை அநேகமாக யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்த விடயத்தில் அதிகமாக செய்வதில்லை. கல்வித்துறைக்காக செலவிடப்பட்டும் பணம் தொடர்பாக அதிகளவுக்கு கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. உண்மையில் இந்த விடயம் அரசியல் ரீதியாக பிளவுபட்ட விவகாரமல்ல. சரியான கொள்கைகள், மறுசீரமைப்புகளே கல்வித்துறைக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.
உயர் கல்வித்துறையைப் பொறுத்தவரை சிறந்த பல்கலைக்கழகங்கள் நாட்டில் இருக்கின்றபோதிலும் க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடையும் இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களில் ஐந்திலொரு பகுதியினருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. மீதிப்பேருக்கு என்ன நடக்கிறது? தனியார் "வர்த்தக'க் கல்வி நிலையங்களில் தொழில் நுட்பக் கல்வியை கற்க வேண்டிய நிலைமைக்கு இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தள்ளப்படுகின்றனர். ஆனால் அதற்கான நிதி வசதி உள்ளதா? என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும். அதேவேளை பண வசதி படைத்த மாணவர்கள் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளபோதிலும் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதென்பது மிக நெருக்கடியான விடயமாகக் காணப்படுகிறது.
கல்வித்துறையை வர்த்தக மயமாக்குவதற்கு எந்த விதத்திலும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. கொள்கை, தரம் என்ற உணர்வுகள் கல்வித்துறையைப் பொறுத்தவரை தேவைப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க "நிதிவசதி' இருந்தால் மாத்திரம் போதும் என்ற எண்ணப்பாட்டுக்கு அப்பால் அத்தகைய கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்போரின் தகைமையை மதிப்பிட்டு அங்கீகாரம் வழங்குவது இங்கு மிக முக்கியமானதாகும்.
தனியாகப் பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளனவா என்பதை கணிப்பீடு செய்வதற்கான அளவுகோல் இங்கு தேவைப்படுகிறது. இதற்கான பொறுப்பு கல்வி, உயர் கல்வி அமைச்சுகளை பொறுத்த விடயமும் பொறுப்புமாகும். தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயம் செய்து அவற்றின் சேவையை தொடருவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கும் சட்ட ரீதியான கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டிருக்க வேண்டும்.
கல்வித்துறையில் அதிகளவு கரிசனை கொண்டவர்களாக இலங்கையர்கள் உள்ளனர். உலக நாடுகளிலேயே சிறப்பான கல்வி முறைமை இருப்பதாக அரசியல் தலைவர்கள் அடிக்கடி கூறுவதையும் கேட்கமுடிகிறது. ஆனால் மாணவர் சமூகம் கல்வித் துறையில் சமவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறைக்கு தேவைப்படும் மறுசீரமைப்புக்காக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதிலும் பார்க்க நியாயமான முறையில் தீர்வைக்காண்பதற்கு அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் சிபார்சுகளையும் கல்விச்சமூகம் முன்வைக்க வேண்டும். அரசாங்கமும் எந்தவிதமான அரசியலுக்கும் இந்தவிடயத்தில் இடமளிக்காமல் கல்விச் சமூகத்தின் ஆலோசனைகளைப்பெற்று மறுசீரமைப்பை துரிதப்படுத்த வேண்டும்.
கல்வியானது வியாபாரமாக்கப்படாமல் கடிவாளம் இடுவதே உடனடித் தேவையாகும்.

முதுமையின் அழகு



நிமிர்ந்த நடையும் 

நேர் கொண்ட பார்வையும்


முறுக்கிய மீசையும்


அகன்ற தோள்களும்


இளமையின் ஆழகு





பொக்கை வாய் சிரிப்பும்


வெண் பஞ்சு தலைமுடியும்


வானவில்லாய் வளைந்து 


கூன் விழுந்த முதுகும்


ஊன்று கோலோடு சேர்த்து


மூன்று காலில் நடப்பதும்

முதுமையின் அழகு

காதல் தோல்வி



பாலர் வயதினிலே

பல இலட்சியங்களுடன்


பாதையோரம் நடைபயின்று


பள்ளி சென்றவன்



பருவ வயதிலே


பாவையவள் கண்பட்டு


பாதைமாறி சென்று


பாதிவழியில் பறந்துபோன


பாவையை நினைத்து


படுகுழியில் விழுகிறான்





நாடியோரம் தாடி வளர்த்து


கைகளிலே மதுப்போத்தல்


விரல்களின் இடையே


மூன்றாம்விரலாய்சிகரெட்


சுயத்தை இழந்து


தெருவோரம் உலாவருகிறான்


ஏன் என்று கேட்டால்


காதல் தோல்வியின்


சின்னங்கள் இவைதானாம்


Wednesday, October 19, 2011

ஏக்கம்



காதலா


உதடுகளை பிரித்து வைக்கும்

நீ,நான் என்ற சொற்களில்


இருந்து தப்பிப்பிழைத்து


நாம் என்ற சொல்லுக்குள்


இருவரும் காணமற் போய்


மரணப்படுக்கையையும் தாண்டி


மறுஜென்மத்திலும் இருவரும்


கருத்து ஒருமித்த காதலராய்


ஒருவருக்காக ஒருவர் ஏங்கவேண்டும்.


ஏன்





சாலை ஓர தொலைவில் நீ 

என் கண்ணுக்கு விருந்தான போது


எனக்கு நிகராய் நீ கூட உன்னை ரசித்தது இல்லை


சதா உன் பெயரை உச்சரிக்கும் என்


இதய ஓசையை நீ ஒட்டுக்கேட்டு 


விடுவாயோஉன் மூச்சு காற்று முத்தமிடும்


நெருக்கத்தில் நீ என்னை கடந்து போது 


நான் உன்னை கவனிக்க மறுத்து 


உன் நிழலோடு விளையாடும் 


மழழை ஆனது ஏன்?

Tuesday, October 18, 2011

வெற்றிக்கு வழி

'ஒரு கருத்தை எடுத்து கொள்க !
அந்த கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்குக!அதையே கனவு காண்க! அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வருக! மூளை, தசைகள் நரம்புகள் நாடிகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்து நிலவட்டும். இந்த நிலையில் மற்ற கருத்துகளை தவிர்த்து விடுக! வெற்றிக்கு வழி இது தான்' என விவேகானந்தர் கூறிஉள்ளார். ஆம் நாம் எடுத்து கொண்ட இலட்சியத்தை நோக்கி நம்பிக்கையுடன் மனம் தளராது முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம்.

உறவுகள் மேம்பட


  • நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.( loose Talks)

  • எந்த விடயத்தையும் பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டு கொடுங்கள் (Compromise)

  • உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Talks)

  • அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)

  • எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்


  • கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.


  • உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.(Flexibility)


  • மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்கள்(Misunderstanding)


  • மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy)
  • புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.

  • பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.