Monday, October 24, 2011

கல்லறை





உலகை பார்க்க விரும்பி 


விரல் விட்டு எண்ணி கொண்டு

உன் இதய துடிப்பில் சுற்றி திரிந்தேன்


அன்னையே உன் கருவறையில் 


பஞ்சத்தில் பரிதவித்து



பாடையில் பயணிப்போரும் 

கொள்ளை நோயின் 


கொடுமையால் கொலையுண்டோரும்



மனிதனை மனிதன்

மதியிழந்துபோய்


மரணப்பாயில் சுற்றுவதும்


இறைவனும் சீற்றம் கொண்டு


இயற்கையை ஏவிவிடுவதும் என


எங்கும் மரண ஓலங்களே


இதை பார்க்கவா பத்துமாதங்கள்


உன்னை சுமைதாங்கி ஆக்கினேன் 


ரணங்களோடு வாழ்வதை 


விட மரணங்கள் மகிழ்வானது 


காப்பாற்ற எவரும் இல்லாத 


அநாதரவான இவ்வுலகில் 


ஆடம்பரமான வீடு எதற்கு


அமைதியாகவும் ஆழமாகவும் உறங்க


ஆறடி நிலத்தில் அடக்கமான கல்லறை போதும்


No comments:

Post a Comment