Tuesday, December 6, 2011

என்னவன்






ஆறடி உயரத்தில் 

உன்னை கற்சிலையாக இல்லாமல் 

சந்தன நிறத்தில் உன்னை

 
கட்டுகுலையாமல் 


கருதரித்தவள் யாரோ? 





விரல்கள் கோதியதில் 

களைந்து விழுந்த முடிகளில் 


ஒன்று இரண்டு நெற்றி 


மீது சாமரம் விசுவது எப்படி? 







வில்லை வளைந்த புருவத்தின் 

கிழே விடாமல் துடித்துக்கொண்டு 


இருக்கும் கண் 
இமைகளின் உள்ளே 

உள்ள வெள்ளி திரையில் 


என் உயிரை ஈர்க்கும் 


கருமணியின் 
கவர்ச்சிதான் என்னவோ? 



புல்லாங்குழலுக்கு பதமான 



முங்கில் பிஞ்சுகள் போலே 


உன் பத்து கைவிரல்களின் 

பவித்திரம் தான் என்னவோ? 



உன்  ஓர விழி பார்வையுடன் 


உதட்டின் வழியான பாதி சிரிப்பும் 


அவன் ஆண்மைக்குள் இருக்கும் மென்மையை 


அருமையாக அறிவிக்கும் 


என் உள்ளம் கவர் கள்வனே 
உன்னை எப்போது காண்பேன் !







No comments:

Post a Comment