Friday, December 16, 2011

கண்ணீரில் மிதக்கும் இதயம்





ஏனையோர்  இதய துடிப்பை டேதெச்கொப்   மூலம் அறிந்து 

ஆதரவளிக்கும் உனக்கு 

என் இதயத்துடிப்பு கேட்காமல் இருகிறதே

நாளை இறப்பை எண்ணி இருபவர்களையும் அன்புடன் 

நூறு வருடங்கள் வாழ்வீர்கள் என 

நம்பிக்கை ஊட்டும்  உனக்கு 

நான் இன்று இறந்து கொண்டிருப்பது உனக்கு தெரிந்தும் 

தெரியாமல் இருக்கிறாயே...



நீ தேடிவந்த உறவு நான் 

நான் தேடாமல் பெற்ற அன்பு உனது 

அனைத்தும் தெரிந்தும் இன்று என்னை

 அலட்சியம் செய்கிறாயே ...



என்காதல் உயிருள்ளது என நினைத்தேன் 

பட்டு போன காதலை 

கண்ணீர் என்னும் உரமூற்றி வளர்த்தேன் 

அது மீண்டும் துளிர்க்கும் என எண்ணி

ஆனால் அது துளிர்க்காது என்பதை 

ஒரு நிமிடத்தில் தெரிந்து கொண்டேன் 

உன்பெயருடன் என் பெயரை 

நீ இணைக்க கூட விரும்பவில்லை என்பதிலிருந்து ...



ஏன் என்னை தேடிவந்து காதல் தந்தாய் 

ஏன் இன்று என்னை மறந்தாய் 

எதற்கும் பதில்தெரியாமல் 

மண்ணுக்குள்ளே  மண் ஆக காத்திருக்கிறேன் 

என் கல்லையிலாவது நம் பெயரை எழுதுவாய் என்ற 

நம்பிக்கையில் ..




No comments:

Post a Comment