Wednesday, January 18, 2012

தேடுகிறேன்





மழைக்காக நான் 

மரத்தடியில் ஒதுங்க 


மரத்தடி இருந்த நீயோ


மங்கை இவள் 


மனதோடு ஒதுங்கினாய் 



விழிவழியே என்னை

 
வழிப்பறி செய்தாய்

 
வலிகளை உணரமுன்

 
வரம் என்று நினைத்தேன் 



இதுவரை நான் 


தொல்லையாய் நினைத்தேன் 


என் தோள்களில் தொங்கிய 


துப்பட்டா 



தென்றல் உதவியோடு 


தெய்வாதினமாய் உன்னை 


தழுவியதால்



உறக்கம் கலைக்கும்


உன் நினைவுகளை


உதற மனமின்றி

 
உடுத்தி கொள்கிறேன் 


என் இரவு நேர போர்வையாய்



நீயோ

 
உன் விழி ஈர்ப்பின்


கவர்ச்சியால் என்னை

 
காந்தமாய் கவர்ந்ததை
 
கவனிக்காமல் சென்றாய்



நானோ 


சோ என பொழியும்

 
மழைத்துழியின் இடைவெளியில்

 
சோராமல் தேடுகிறேன் 


மனதை திருடி விட்டு

 
மாயமாய் மறைந்த உன்னை...





No comments:

Post a Comment